அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ - எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்”. 66:8 23:118

திங்கள், 30 ஜூலை, 2012

திக்ரு துஆ செய்யும் ஒழுங்கு முறைகள் -திக்ரு

2:198 لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَبْتَغُوا فَضْلًا مِّن رَّبِّكُمْ ۚ فَإِذَا أَفَضْتُم مِّنْ عَرَفَاتٍ فَاذْكُرُوا اللَّهَ عِندَ الْمَشْعَرِ الْحَرَامِ ۖ وَاذْكُرُوهُ كَمَا هَدَاكُمْ وَإِن كُنتُم مِّن قَبْلِهِ لَمِنَ الضَّالِّينَ

2:198. (ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது; பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது “மஷ்அருள் ஹராம்” என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்; உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.

2:199 ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

2:199. பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

2:200 فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا ۗ فَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ

2:200. ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்-இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், “எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு” என்று கூறுகிறார்கள்;
இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை.

2:201 وَمِنْهُم مَّن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

2:201. இன்னும் அவர்களில் சிலர், “ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.

2:202 أُولَٰئِكَ لَهُمْ نَصِيبٌ مِّمَّا كَسَبُوا ۚ وَاللَّهُ سَرِيعُ الْحِسَابِ

2:202. இவ்வாறு, (இம்மை-மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு; தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்.

2:203 وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَّعْدُودَاتٍ ۚ فَمَن تَعَجَّلَ فِي يَوْمَيْنِ فَلَا إِثْمَ عَلَيْهِ وَمَن تَأَخَّرَ فَلَا إِثْمَ عَلَيْهِ ۚ لِمَنِ اتَّقَىٰ ۗ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُمْ إِلَيْهِ تُحْشَرُونَ

2:203. குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை; யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை; (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

2:239 فَإِنْ خِفْتُمْ فَرِجَالًا أَوْ رُكْبَانًا ۖ فَإِذَا أَمِنتُمْ فَاذْكُرُوا اللَّهَ كَمَا عَلَّمَكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ

2:239. ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று, (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.
3:41 قَالَ رَبِّ اجْعَل لِّي آيَةً ۖ قَالَ آيَتُكَ أَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلَاثَةَ أَيَّامٍ إِلَّا رَمْزًا ۗ وَاذْكُر رَّبَّكَ كَثِيرًا وَسَبِّحْ بِالْعَشِيِّ وَالْإِبْكَارِ
3:41. “என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!” என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), “உமக்கு அறிகுறியாவது: மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து; அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!” என்று கூறினான்.

3:191 الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ

3:191. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்றும்;)

4:103 فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِكُمْ ۚ فَإِذَا اطْمَأْنَنتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ ۚ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا

4:103. நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.

7:29 قُلْ أَمَرَ رَبِّي بِالْقِسْطِ ۖ وَأَقِيمُوا وُجُوهَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ وَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ ۚ كَمَا بَدَأَكُمْ تَعُودُونَ

7:29. “என் இறைவன், நீதத்தைக் கொண்டே ஏவியுள்ளான்; ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்கள் முகங்களை அவன் பக்கமே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்; வணக்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை அழையுங்கள்; உங்களை அவன் துவக்கியது போலவே (அவனிடம்) நீங்கள் மீளுவீர்கள்” என்று நீர் கூறும்.

7:55 ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ

7:55. (ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும்
பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.

7:180 وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ فَادْعُوهُ بِهَا ۖ وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ ۚ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ

7:180. அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.

7:205 وَاذْكُر رَّبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُن مِّنَ الْغَافِلِينَ

7:205. (நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்.

17:110 قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَٰنَ ۖ أَيًّا مَّا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذَٰلِكَ سَبِيلًا

17:110. “நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன” என்று (நபியே!) கூறுவீராக; இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர் மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தயமான வழியைக் கடைப்பிடிப்பீராக.

22:28 لِّيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَىٰ مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ ۖ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ

22:28. தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.

22:34 وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِّيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَىٰ مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ ۗ فَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا ۗ وَبَشِّرِ الْمُخْبِتِينَ

22:34. இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பான் கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர்
நன்மாராயங் கூறுவீராக!

24:36 فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَن تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ

24:36. இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்.

40:14 فَادْعُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

40:14. ஆகவே, காஃபிர்கள் வெறுத்த போதிலும், நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தித்து) அழையுங்கள்.

43:13 لِتَسْتَوُوا عَلَىٰ ظُهُورِهِ ثُمَّ تَذْكُرُوا نِعْمَةَ رَبِّكُمْ إِذَا اسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُولُوا سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَٰذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ

43:13. அவற்றின் முதுகுகளின் மீது நீங்கள் உறுதியாக அமர்ந்து கொள்வதற்காக; அவற்றின் மேல் நீங்கள் உறுதியாக அமர்ந்ததும், உங்கள் இறைவனுடைய அருளை நினைவு கூர்ந்து “இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ் விறை)வன் மிக்க பரிசுத்தமானவன்” என்று நீங்கள் கூறுவதற்காகவும்

வெள்ளி, 27 ஜூலை, 2012

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லுதல் - ஸலவாத்து

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லுதல் மிக முக்கிய சுன்னாவாகும். அது ஒரு முக்கிய திக்ராகவும் அமைகிறது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லுதல் என்பது அல்லாஹ்விடத்தில் ஸலவாத்துச் சொல்லுமாறு பிரார்த்திப்பதாகவே அமைகிறது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களது பெயரைச் சொல்லக் கேட்டும்போது ஸலவாத்துச் சொல்வது வாஜிபாகவும் அமைகிறது. இவ்விஷயங்கள் குறித்து விளக்குகின்ற அல்குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் பின்வருமாறு;

"நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது மலக்குகளும் நபி மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள். விசுவாசிகளே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்வீர்களாக!"
(ஸூரா அல் அஹ்ஜாப், வசன எண்: 56.)

1. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

"யார் என்மீது ஒருமுறை ஸலவாத்துச் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத்துச் சொல்கிறான்"
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல் ஆஸ் (ரலி)
ஆதார நூல்: ஸஹீஹ் முஸ்லிம்.
2. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

"என் பெயர் கூறப்பட்டும் என் மீது ஸலவாத்துச் சொல்லாதிருப்பவரே உலோபியாவார்"
அறிவிப்பவர்: அலி இப்னு அபூதாலிப் (ரலி)
ஆதார நூல்கள்: ஸுனன் திர்மிதி, முஸ்னத் அஹ்மத்.

ஸலவாத்துச் சொல்லும் முறை

"ஸலவாத் இப்றாஹீமிய்யா" என்ற தொழுகையில் அத்தாஹிய்யாத்தின் இறுதியில் ஓதுகின்ற "ஸலவாத்" இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்வதின் பூரண வடிவமாகும். எனினும்,

"அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத்"

பொருள்: யா அல்லாஹ்! முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அருள் புரிவாயாக!

என்று சொல்லிக் கொள்வது அதன் சுருக்க அமைப்பாகும். இதனை,

"ஸல்லல்லாஹு அலா முஹம்மத்"

பொருள்: முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிவானாக!
என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து மக்களுக்கு இறைத்தூதை கொண்டு வந்து தந்தவர். எனவேதான் அவர்களை நம்பிக்கை கொள்ளல் ஈமானின் ஒரு பகுதியாகிறது. இதன் காரணமாகவே அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லுமாறு, அருள் புரியுமாறு அல்லாஹ்வைப் பிரார்த்தித்தல் உயர்ந்த வணக்கமாகிறது. இதுவே இறைத்தூதர் மீது ஸலவாத்துச் சொல்லல் என்பதன் பொருளாகும். இந்த வகையில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பெயர் சொல்லப்பட்டும் அந்த நபியின் உயர்ந்த பணியை உணர்ந்து இந்த ஸலவாத்தை, பிரார்த்தனையைப் புரியாதிருத்தல் பெருங்குற்றமாகக் கருதப்படுகிறது.

திங்கள், 23 ஜூலை, 2012

திக்ரு - அல்லாஹ்வை நினைவு கூர்வதன் சிறப்பு

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

"எனவே என்னை நீங்கள் நினைவுகூருங்கள்; நான் உங்களை நினைவு கூருவேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்;(என் அருட்கொடைகளை மறுத்து) நன்றி மறவாதீர்கள்".(குர்ஆன் 2:152)
"இறைநம்பிகை கொண்டவர்களே, அல்லாஹ்வை அதிகம் அதிகமாக நினைவு கூருங்கள்"(குர்ஆன் 31:41)
"அல்லாஹ்வை அதிகம் அதிகமாக நினைவுகூரக்கூடிய ஆண்கள் - பெண்கள் யாரோ அவர்களுக்கு மன்னிப்பையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ளன்". (குர்ஆன் 32:35)
மேலும் காலையிலும் மாலையிலும் - உம் மனத்திற்க்குள் பணிவாகவும் அச்சத்துடனும் மெதுவான குரலிலும் உம் இறைவனை நினைவுகூர்வீராக! மோலும் அலட்சியமாய் இருப்பவர்களுள் நீரும் ஒருவராகி விடாதீர்" (குர்ஆன் 7:205)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தன் இறைவனை நினைவு கூருகிற மனிதன் மற்றும் தன் இறைவனை நினைவுகூராத மனிதன் இருவரின் உதாரணம் உயிருள்ளவனையும் மரணமானவனையும் போன்றதாகும்" நூல்: புகாரி -பத்ஹுல் பாரி (பாகம் 11 பக்கம் 208)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்: நான் உங்களுக்கு ஓர் அமலை அறிவித்துத் தரவா? அது உங்களின் எல்லா அமல்களை விடவும் சிறந்தது. உங்கள் அரச(ன் இறைவ)னிடதில் மிகவும் தூய்மையானது: உங்கள் அந்தஸ்துகளை உயர்தக் கூடியது: தங்கம் வெள்ளியை நீங்கள் செலவு செய்வதை விடவும் உங்களுக்குச் சிறந்தது: மட்டுமல்ல, நிங்கள் உங்கள் எதிரிகளுடன் போரிட்டு- நீங்கள் அவர்களின் கழுத்தையும் அவர்கள் உங்களின் கழுத்தையும் வெட்டுவதை விடவும் சிறந்ததும் ஆகும்" தோழர்கள்: " அவசியம் கற்றுத் தாருங்கள் என்று. நபியவர்கள் கூறினார்கள்: 'அதுதான் அல்லாஹ்வை திக்ர் செய்வது-நினைவு கூர்வது' நூல்: திர்மிதி. பாகம்: 5. பக்கம்: 459.இப்னுமாஜா: பாகம் 2. பக்கம் 1245.பார்க்க: ஸஹீஹ் இப்னுமாஜா பாகம் 2. பக்கம் 316ஸஹீஹ் திர்மிதி பாகம்3. பக்கம் 139.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: "அல்லாஹ் கூறுகிறான்: என் அடியான் (மனிதன்) என்னைக் குறித்து என்ன எண்ணம் கொண்டுள்ளானோ அதற்கு ஏற்பவே நான் உள்ளேன். அவன் என்னை நினைவு கூறும்போது நான் அவனுடன் இருக்கிறேன். அவன் என்னை மனதினுள் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் மனதினுள் நினைவு கூர்கிறேன். அவன் என்னை ஒரு கூட்டத்தில் நினைவு கூர்ந்தால் அதனை விடவும் சிறந்த கூட்டத்தில் நான் அவனை நினைவு கூர்கிறேன். அவன் என்னை நோக்கி ஒரு சாண் நெருங்கி வந்தால் நான் அவனை நோக்கி ஒரு முழம் நெருங்கிச் செல்கிறேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் நெருங்கி வந்தால் நான் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கிச் செல்கிறேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவன் பக்கம் ஓடோடிச் செல்கிறேன். நூல்: புகாரி. பாகம் 8. பக்கம் 171.-முஸ்லிம் பாகம் 4. பக்கம் 2061.
அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஒரு மனிதர் கேட்டார்: அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தின் கடமைகள்-நெறிமுறைகள் என்னைப் பொறுத்து மிகவும் அதிகமாகி விட்டன. எனவே ஒரு விஷயத்தை எனக்கு நீங்கள் அறிவித்துத் தாருங்கள். நான் அதை உறுதியாகப் பற்றிக் கொள்வேன்" அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "உமது நாவு அல்லாஹ்வின் திக்ரில் ஈடுபட்டு பசுமையாக இருக்கட்டுமாக!" நூல்: திர்மிதி. பாகம்: 5. பக்கம்: 458.இப்னுமாஜா பாகம்:2. பக்கம்: 1246.ஸஹீஹ் திர்மிதி பாகம்: 3. பக்கம்: 139.ஸஹீஹ் இப்னுமாஜா பாகம்: 2. பக்கம்: 317.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: "எவர் அல்லாஹ்வின் வேதத்தில் இருந்து ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு அதன் பொருட்டால் ஒரு நன்மையுண்டு. அந்த ஒரு நன்மை, அதே போன்று பத்து நன்மைகளுடன் அதிகரிக்கிறது. அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூறவில்லை. மாறாக அலிஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்து". நூல்: திர்மிதி பாகம்: 5. பக்கம்: 175.ஸஹீஹ் திர்மிதி பாகம்:3. பக்கம்: 9.அல்ஜாமிஉஸ் ஸகீர் பாகம்:5 பக்கம்:340
உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நாங்கள் ஸுஃப்பாவில் (மஸ்ஜிதின் முன் வராந்தாவின் திண்ணையில்) இருந்து கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் (வீட்டில் இருந்து) வெளியே வந்தார்கள். அப்போது கூறினார்கள்: "தினமும் பத்ஹாவுக்கு அல்லது அகீகிற்கு சென்று அங்கிருந்து பெரிய பெரிய கொழுத்த இரண்டு ஒட்டகங்களை பாவமோ, பந்த முறிவோ இல்லாத வகையில் கொண்டு வருவதை விரும்புபவர் உங்களில் எவரும் உண்டா?" அதற்கு நாங்கள் கூறினோம்: "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவருமே அதை விரும்புகிறோம்." நபியவர்கள் சொன்னார்கள்: "உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்குச் சென்று, அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை கற்றுக் கொடுக்கவோ, ஓதவோ செய்யலாமே! இரண்டு வசனங்களை ஓதுவது அவருக்கு இரண்டு ஒட்டகங்களை விடவும் சிறந்ததாகும். மூன்று வசனங்கள் என்றால் மூன்று ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும். நான்கு வசனங்கள் என்றால் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும். இவ்வாறே அவற்றின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப உள்ள அத்தனை ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும்" நூல்: ஸஹீஹுல் முஸ்லிம் பாகம்: 1. பக்கம்: 553.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: "ஒருவர் தான் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடவில்லையெனில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்மீது அது குறைபாட்டிற்குரியதாக அமைந்து விடும். ஒருவர் தான் படுத்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடவில்லையெனில் அதுவும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்மீது குறைபாட்டிற்குரியதாக அமைந்து விடும்." நூல்: அபூதாவூத் பாகம்: 4. பக்கம்: 264
"எந்த ஒரு கூட்டத்தினரும் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடாமலும் தங்களின் நபி மீது ஸலவாத்துச் சொல்லாமலும் இருப்பார்களானால் அது அவர்கள் மீது நஷ்டத்திற்குரியாதாகவே அமைந்து விடும். பிறகு அவன் (அல்லாஹ்) நாடினால் அவர்களை வேதனையில் ஆழ்த்துவான். அவன் நாடினால் அவர்களை மன்னிப்பான்." நூல்: திர்மிதி. பார்க்க: ஸஹீஹுத் திர்மிதி பாகம்:3. பக்கம்: 140
"ஒரு கூட்டத்தினர் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடாமல் எழுந்தார்களேயானால், அவர்கள் செத்த கழுதையை விட்டுவிட்டு எழுந்து சென்றவர்கள் போல் ஆவார்கள். மேலும் அது அவர்களுக்கு கைசேதமாகவே அமையும்!"

ஞாயிறு, 22 ஜூலை, 2012

அல்லாஹ்வின் பூரணமான மன்னிப்பைப் பெற....!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘எவர் இந்த வார்த்தைகளை ஓதினாரோ அவரை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். அவர் யுத்தத்தில் புறங்காட்டி ஓடியிருந்தாலும் சரியே!


”அஸ்தஃபிருல்லாஹல்லதீ லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூமு வஅதுபு இலைக்க”


பொருள்: அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கோருகிறேன். அவன் எப்படிப்பட்டவன் எனில், அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறில்லை. அவன் நித்திய ஜீவன். பேரண்டம் முழுவதையும் நிர்வகிப்பவன். மேலும் பாவமீட்சி தேடி அவன் பக்கமே மீளுகிறேன்.


ஆதார நூல்கள்: அபூதாவூத் பாகம் 2 பக்கம் 85. திர்மிதி பாகம் 5 பக்கம் 569.
-ஹாகிம் அவர்கள் இதன் அறிவிப்புத் தொடரை நம்பகமானது என்று கூறியுள்ளார்கள். இமாம் தஹபியும் அதற்கு உடன்பட்டுள்ளார்கள். பாகம் 1 பக்கம் 511. அல்பானி அவர்களும் இதனை நம்பகமானது என்று கூறியுள்ளார்கள். பார்க்க: ஸஹீஹுத் திர்மிதி பாகம் 3 பக்கம் 182. ஜாமிஉல் உஸூல் அஹாதீஸிர் ரஸூல் பாகம் 4 பக்கம் 389-390.

சனி, 21 ஜூலை, 2012

நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை? - துஆக்கள்


நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
அரசத்துறவி இமாம் இப்றாஹீம் இப்னு அத்ஹம்(ரஹ்) அவர்களிடம் பஸரா நாட்டு மக்கள் ‘எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டனர். உபதேசமா? என்ன உபதேசம் செய்ய வேண்டும் என்று கேட்டார்கள் இமாமவர்கள்
இறைவன் தனது திரு வேதத்தில்
‘என்னை அழையுங்கள். நான் உங்களுக்கு பதில் அளிக்கிறேன்’ (40:60) எனக் கூறியுள்ளான். நாங்கள் அவனிடம் எவ்வளவோ கேட்டுப்பார்த்தும்  எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லையே! எங்கள் துஆக்கள் கபூலாவதில்லையே! ஏன்? ஏன்று மக்கள் கேட்டார்கள்.
நீங்கள் உயிரோட்டமுள்ள இதயங்களிலிருந்து இறைவனை அழைப்பதில்லை. உங்களிடம் காணப்படவேண்டிய பத்து விஷயங்கள் இல்லாது போய்விட்டதால் உங்கள் இதயங்களில் ஜீவனே இல்லை! என்று பதிலளித்தார் அந்த அறிஞர் பெருமகனார்.
பத்து விஷயங்களா? அவை என்ன? என்று வியப்போடு வினவினார்கள் அந்த மக்கள்.
மேதை இப்றாஹீம் அத்ஹம் பதிலளித்தார்:-
1. இறைவனை நீங்கள் உணருகிறீர்கள். ஆனால், அவன் ஏவிய வழிகளிலே நடந்து செயல்படத் தவறிவிட்டீர்கள்.
2. திருக்குர்ஆனை ஓதுகிறீர்கள். ஆனால், அதைச் சரியாகப் புரிந்து கொண்டு நீங்கள் செயலாற்றுவதில்லை.
3. பெருமானார்(ஸல்) அவர்களின் சமுதாயத்தவர் நாங்கள்! அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கிறோம் எனப் பெருமைபப்டுகிறீர்கள். ஆனால், அவர்களது புனித வாழ்வு முறையை நீங்கள் பின்பற்றுவது கிடையாது.
4. சுவர்க்கத்தைப்பற்றி நிறைய பேசுகிறீhகள்! அதற்குச் செல்லவேண்டுமென  ஆசைப்படுகிறீர்கள். ஆனால், அதற்குத் தகுதியானவர்களாக ஆக எந்த முயற்சியும் நீங்கள் செய்வதில்லையே!
5. நரகத்திற்குப் பயப்படுவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், நீங்கள் செய்யும் செயல்களோ நரகத்தின் பால் உங்களை இழுத்துச் செலவதாகவே உள்ளன. ஆனால், நீங்கள் அவற்றைவிட்டும் தவிர்ந்து கொள்வதாக இல்லையே!
6. மரணம் நிச்சயமானது என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால், இந்த உலகமே சதமென்று எண்ணிக் கொண்டு செயலாற்றுகின்றீர்கள்.
7. உங்கள் சகோதரர்களிடம் உள்ள சிறுகுறை கூட உங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது. ஆனால, உங்களிடம் மலிந்துள்ள பல குறைகளை நீங்கள் எண்ணிப் பார்ப்பதே கிடையாது.
8. ஷைத்தானை வெறுப்பதாகவும் அவன் உங்களின் மிகப்பெரிய எதிரி என்றும் வெளியிலே பேசிக் கொள்கிறீர்கள். ஆனால், அந்தரங்கத்திலோ அவனை வரவேற்று விருந்தளித்து கொஞ்சிக் குலாவி அவனுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கிறீர்கள்.
9. இறைவன் உங்களிக்களித்துள்ள அருட் பெரும் கொடைகளை தெரிந்து வைத்திருக்கிறீர்கள். ஆனால், அவனுக்கு நன்றியுள்ள அடியானாக நீங்கள் நடந்து கொள்வதில்லையே?
10. இறந்தோரை புதைகுழி வரை சென்று புதைத்துவிடுகிறீர்கள். ஆனால், அதிலிருந்து நீங்கள் எந்தப் படிப்பினையும் பெறுவதில்லையே?
 இந்த நிலையிலுள்ள உங்கள் அழைப்பிற்கு (துஆவுக்கு) இறைவன் எப்படி பதிலளிப்பான்?
 இவ்வாறு கூறிவிட்டு தொடர்ந்து நடக்கலானார் அந்த மாமேதை. மக்களோ தங்களின்
 நிலையை எண்ணி மனம் உருகினார்கள். தங்களின் குறைகளை அசை போடலானார்கள்.
 நாமோ நம் குறைகளைப்பற்றி எந்தக்கவலையும்படாமல் நம்மைத் திருத்திக்கொள்ளாமல்  
 நடமாடிக்கொண்டிருக்கிறோமே! இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வாழ்வு?